Wednesday, February 28, 2018

கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு எழுதிய கவிதை

காலந்தோறும் பணி ஓய்வு பாராட்டு விழாக்கள் நடந்தபடியே தானிருக்கின்றன….
ஆனால்
காலத்தின் கண்களை  பனிக்க வைக்கும
விழாவாக நடக்கிறது இந்த விழா…
என் நீண்ட பணிக்காலத்தில்
எத்தனையோ
கண்காணிப்பாளர்கள்…
நீங்கள் மட்டும் தான்
அன்பின் பெருமரமாய்
ஆதூர விழுதுகளுடன்
மனதில் வேர்பிடித்தவர்…..
சினம் என்ற சேர்ந்தாரைக்கொல்லியை
அருகில் சேர்க்காத உங்கள்
சிறந்த பாடம்
எல்லோரும் படிக்க வேண்டியது….
அனைவரின் தேவைகளையும்
உணர்ந்தபடி
அலுவலக வசதிகள் இல்லாத சூழலிலும்
அன்றாடம் உழைத்தது உங்கள்
கடமைக்கு கட்டியம் கூறும் எங்கள் மனதில் என்றும்…..
ஓய்வறியாத உங்கள் வாழ்வில்
எல்லா வளங்களும், நிறைவான மகிழ்வும்
எப்போதும் நிறைந்திருக்கட்டும்…
எப்போதும் புன்னகை நிறைந்த
உங்கள் பொன்முகம்
பொலிவோடிருக்கட்டும்….
எங்கள் வாழ்வின் எல்லா காலங்களிலும்
உடனிருந்து வாழ்த்த உங்கள்
கரங்கள் எங்களிடம் தொடர்பிலிருக்கட்டும்ம….
மகிழ்வாய், நிறைவாய்
நீடு வாழ வாழ்த்துகிறேன்
என் அன்புக்குரிய கண்காணிப்பாளரே...

No comments:

Post a Comment