Tuesday, February 15, 2011

பிரிவு...2

உன் அன்பு
எத்தனை வலிது என்பதை
பிரிவில் உணர்ந்தேன்....

எப்போதும்
உன்னையேச் சுற்றி வரும்
பட்டாம்பூச்சி மனது...!

அருகில் இருக்கும்போது

அடித்துக் கொள்வது கூட
அன்பின் வெளிப்பாடு என்று
நீ
இல்லாமல் போகின்ற
நேரங்களில் புரிகிறது....

தூரத்தில் நின்றபடி
சுட்டெரிக்கும் சூரியன் போல்
எங்கேயோ இருந்தபடி
என்னை சூடாக்க
உன்னால் மட்டும்தான் முடிகிறது...

இணைந்திருக்கும்  தருணங்களில்
நீ
எனக்கு வெளியே இருக்கிறாய்...
ஆனால் பிரிவிலோ...
எனக்குள்ளேயே இருந்து
உன்
நினைவு தாளத்திற்கு
என்னை ஆட வைக்கிறாய்.....

நன்றி: அவள் விகடன்

1 comment:

  1. அருமையான கவிதை. பதிவு செய்யப்பட்டு 15 நாட்களை கடந்து விட்டது, இருப்பினும், தனியாக இருக்கிறது. இதுவும் விமர்சனங்களைப் பிரிந்து தனிமையில் வாடுகிறதோ?

    ReplyDelete